திங்கள், நவம்பர் 14, 2011

பாகிஸ்தான் பூகம்பம்.. (19-8-206 ல் எழுதியது)

وَلَقَدْ أَهْلَكْنَا الْقُرُونَ مِن قَبْلِكُمْ لَمَّا ظَلَمُواْ وَجَاءتْهُمْ رُسُلُهُم بِالْبَيِّنَاتِ وَمَا كَانُواْ لِيُؤْمِنُواْ
كَذَلِكَ نَجْزِي  الْقَوْمَ الْمُجْرِمِينَ {13

உங்களுக்கு முன் அநீதி இழைத்த பல தலைமுறையினரை அழித்திருக்கிறோம். அவர்களிடம் அவர்களின் தூதர்கள் தெளிவான சான்றுகளைக் கொண்டு வந்தனர். அவர்கள் நம்பிக்கை கொள்வோராக இருக்கவில்லை. குற்றம் புரியும் கூட்டத்தை இவ்வாறே தண்டிப்போம்.  10:13.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

நாம்  இதற்கு முன்பு அமெரிக்காவில் ஏற்பட்ட கத்ரீனா சீற்றத்தைப் பற்றி எழுதி இருந்தோம் அதற்கு சில சகோதரர்கள் நமக்கு பதில் எழுதி இருந்தார்கள்.


அதில் இப்பொழுது பாகிஸ்தானில் முஸ்லிம் நாட்டில் ஏற்பட்டுள்ள பூகம்பத்தைப் பற்றி ஏன் வாய் திறக்க வில்லை ? அதைப் பற்றி ஏன் எழுத வில்லை ? முஸ்லிம் நாடு என்பதற்காகவும் அங்கு மடிந்த மக்கள் முஸ்லிம்கள் என்பதால் எழுதவில்லையா ? என்பது போன்ற கேள்விகள் எழுப்பப்பட்டிருந்தன..

பதில் ! கத்ரீனா சூறாவளி வெறும் கிருஸ்தவ மக்களை மட்டும் தான் துடைத்துக் கொண்டு சென்றதா ? அமெரிக்காவில் முஸ்லிம்கள் வசிக்கவில்லையா ? கத்ரீனா சீற்றத்தில் மடிந்தவர்களில் முஸ்லீம்கள் அடங்கி இருக்க வில்லையா ? என்கின்ற கேள்வியை முதலில் நாம் கேள்வி எழுப்பியவர்கள் மீது வைத்து விட்டு அடுத்து அவர்களது  ஐயப்பாடுகளுக்கு தெளிவு கான்போம் !.

நாம் கத்ரீனா சீற்றத்தைப பற்றி எழுதியவற்றை அவர்கள் தவறான கண்ணோட்டத்தில் பார்த்ததால் ஏற்பட்ட சந்தேகம் ஆகும் அது.

நாம் அப்படி குறுகிய கண்ணோட்டத்தில் கத்ரீனா சீற்றத்தைப் பற்றி எழுதி இருந்தோமானால் அதற்கு முன்பு இந்தோனேசிய சுமத்ரா தீவுகளிலிருந்து புறப்பட்டு இலங்கை தீவு தொட்டு இந்தியா, மாலதீவு மற்றும் பல பிரதேசங்களை ஒரு குலுக்கு குலுக்கிய சுனாமி பற்றி பதினைந்துக்கும் மேற்பட்ட தொடர்களை தொடர்ந்து எழுதி இருந்திருக்க மாட்டோம் காரணம் சுனாமியில் மூழ்கி மடிந்தவர்களில் ஏராளமான பேர் முஸ்லிம்களாவர் சுனாமியில் சிக்கி சிதைந்து உருக்குலைந்து போன நகரங்களில் பாதிக்குமேற்பட்டது இஸ்லாமிய  நகரங்களாகும்.

சுனாமி தமிழ்நாட்டில் கிருஸ்தவர்கள் அதிகம் வாழும் வேளாங்கண்ணியையும் ஒரு கைபார்த்தது அத்துடன் அதன் அருகிலுள்ள முஸ்லிம்கள் அதிகம் வாழும் நாகூரையும் ஒரு பிடி பிடித்தது என்றால் மிகையில்லை.

இதிலிருந்து நீங்கள் சருக்கமாக புரிந்து கொள்வது யாதெனில் ?.
இறைவனுடைய கோபம் ஏற்படும் போது அது சாதி, மத, பேதம் பார்ப்பதில்லை, காரணம் சாதி, மத, பேதம் இறைவன் பார்க்க பார்க்க மாட்டான். சாதி, மதப் பிரிவு இறைவன் உண்டாக்க வில்லை அது மனிதன் உண்டாக்கிக் கொண்டவைகளாகும்.
 .
மனித இனம் படைக்கப்பட்டது முதல் இன்று வரை இறைவன் ஒரே ஒரு மார்க்கத்தை (இஸ்லாத்தை) மட்டுமே மனித குலத்தின் மீது கடமையாக்கி அதை தன்னிடத்தில் அங்கீகரித்தும் கொண்டான்.

3: 19. அல்லாஹ்விடம் மார்க்கம் என்பது இஸ்லாமே. வேதம் கொடுக்கப்பட்டோர்27 தம்மிடம் விளக்கம் வந்த பின் தமக்கிடையே ஏற்பட்ட பொறாமையின் காரணமாகவே முரண்பட்டனர். அல்லாஹ்வின் வசனங்களை ஏற்க மறுப்போரை அல்லாஹ் விரைந்து விசாரிப்பவன்.

இறைவனால் மனித குலத்துக்கு ஆகுமாக்கப் பட்டவைகளை; இன்ன இன்னவைகள்,

விலக்கப்பட்டவைகள் இன்ன இன்னவைகள் என்று தனது தூதர்கள் மூலம் அறிவித்தான் .

மனிதகுலம் அவைகளைப் புறக்கனிக்கும் போது தனது சுய விருப்பப்படி தனது சரீர சுகத்திற்காக பலவாறான மனிதனே வெட்கி தலைகுணியும் படியான இச்சைகளை தேடிக் கொள்ளும் போது, அத்துடன் நில்லாமல் பலசாலி பலஹீனமானவனின் மீது அத்து மீறும் போது அங்கு இறைவனின் கட்டளைகள் பகிரங்கமாக மீறப்படுகிறது அவைகள் ஒரு எல்லையை கடக்கும் போது  இறைவனின் கோபம் இறங்குகிறது.

தன்னைப் போன்ற ஒரு மனிதன் தனது அத்தியாவசியத் தேவைகளுக்காக தன்னைத் தேடி வரும் போது அவனுக்கு பிரதிவுபகாரமாக எதையும் எதிர்பாராமல் உதவி செய்வது மனிதாபிமானம்.

ஆனால் மனிதன் அவனின் தேவைகளுக்கேற்றவாறு அவனின் மீது வட்டி எனும் ஒப்பந்தத்தில் சிறிய அளவிலான ஒன்றைக் கொடுத்து விட்டு பெரிய அளவிலான ஒன்றை கைப்பற்றிக் கொண்டு அவனை நிர்க்கதியாக்கி நிர்மூலமாக்கி விட்டு விடுகிறான். சொற்ப கிரயத்திற்கு அடமானம் வைத்தப் பொருள் திரும்பப் பெற முடியாமல் போனதால் அவனுடைய வயிறு பற்றி எறிய ஆரம்பிக்கிறது. அங்கு அல்லாஹ்வுடைய சட்டம் மீறப்படுவதுடன் மனிதன் மனிதனின் மீதும் செலுத்த வேண்டிய மனிதாபிமானம் செத்து விடுவதால் அல்லாஹ்வுடைய கோபம் இறங்கத் தொடங்குகிறது. இது மற்ற நாடுகளில் மட்டும் தான் நடக்கிறதா ? இஸ்லாமிய நாடுகளில் வாழும் முஸ்லிம்களிடத்தில் நடக்க வில்லையா ? என்பது ஒரு தெளிவு.

வரதட்சனை கொடுமையால் ஏழ்மையான வீடுகளில் திருமனமாகாத கண்ணிப் பெண்களுக்கு வாழ்க்கை வசதி செய்து கொடுக்காமல் தனது பொருளாதாரத்தைக் காட்டி தனது வலையில் விழச்செய்து அவளை நிரந்தர விபச்சாரியாக்கி விட்டு விடுகிறான் மனிதாபிமானம் செலுத்தி அவளுக்கு வாழ்க்கை வசதி செய்து தராததுடன் அவளின் மீது மிருகமாகி விடுகிறான். இங்கு அல்லாஹ்வுடைய கோபம் இறங்குமா ? இறங்காதா ? இது மற்ற நாடுகளில் மட்டும் தான் நடக்கிறதா ? இஸ்லாமிய நாடுகளில் நடக்க வில்லையா ? என்பது மற்றொரு தெளிவு

இறைவன் மனித சமுதாயத்தின் மீது மதுவை தடைசெய்தான் மதுவில் மனிதனுக்கு கிடைக்கும் சில நன்மைகளை விட பலமடங்கு தீமைகள் இருப்பதை சுட்டிக் காட்டினான் .

மனிதன் அதை ஏற்றுக் கொண்டானா ? மதுவை தயாரித்தான் சுவைத்தான் மக்களிடம் அறிமுகம் செய்து விற்பனை செய்தான் ஏராளமான மக்கள் மதுவிற்கு அடிமையாகினர் அதற்கு அடிமையான பல குடும்பங்கள் சீரழிந்தன. கஞ்சா, அபின் போன்ற போதை வஸ்த்துக்கள் அரபு நாடுகளில் தடை செய்யப்பட்டு அதை உபயோகிப்பவன் மீது அதை விற்பனை செய்பவன் மீது மரண தண்டனை விதியாக்கப்பட்டுள்ளது அவைகளை மற்றவர்கள் மட்டும் தான் செய்கிறார்களா ? முஸ்லிம்கள் செய்யவில்லையா ? என்பது மேலும் ஒரு தெளிவு அவைகளை பெரும்பாலும் அரபு நாடுகளுக்கு கடத்தி வருபவர்களில் முதலிடம் வகிப்பவர்கள் பாகிஸ்தானிகளாகும் என்பதை நமது அரபு நாட்டு அனுபவத்தின் வாயிலாக கூறிக் கொள்கிறோம்.

மனிதன் மனிதனின் மீது அத்து மீறும்போது மது , மாது , சூது, கொலை, கொள்ளை, கற்பழிப்பு போன்றவைகளை மனிதன் தாராளமாக நிகழ்த்தும்போது அல்லாஹ்வுடைய கோபம் மனித சமுதாயத்தின்மீது இறங்குகிறது தடுக்கப்பட்டவைகள் பாகிஸ்தானில் நடைபெறாமலா இருக்கிறது ? தாராளமாக அவைகள் அங்கு புழக்கத்தில் உள்ளவைகளாகும்.


பாகிஸ்தானில் என்ன வடிகட்டிய இஸ்லாமிய ஆட்சியா நடைபெறுகிறது ? ( சில விஷயங்களில் மட்டும் இஸ்லாமிய சட்டம் பேனப்படுகிறது பலவிஷயங்களில் இஸ்லாமிய சட்டம் பகிரங்கமாக மீறபட்டுவருகிறது ) 
ஆகையால் அங்கு ஏற்பட்டதும் இறைவனின் கோபமேயன்றி வேறில்லை .

ஜார்ஜ புஷ்ஷூம், அவரது மகன் டபுள்யூ புஷ்ஷூம் கத்ரீனா சீற்றத்துடன் விமிர்சிக்கப் பட்டதின் முக்கிய நோக்கம் யாதெனில்.

அவர்கள் சாதி மத பேதம் பார்த்தார்கள் ஒட்டு மொத்த முஸ்லிம்களையும் தீவிரவாதிகள் என்று குற்றம் சுமத்தினார்கள், இஸ்லாமிய மதத்தை தவறான மதம் என்று பகிரங்கமாக அறிவித்தார்கள்.

உஸாமாவால் ஆப்கானில் இஸ்லாமிய சட்டம் அமுலாக்கப்பட்டதாலும், புத்தர் சிலை தகர்க்கப்பட்டதாலும் சினங்கொண்ட யூதர்கள் புஷ்ஷைத் தூண்டி விட்டார்கள், யூதர்களின் அடிவருடியாகிய புஷ் இஸ்லாமிய ஆட்சி நடக்கும் ஆப்கானை சிதைக்க முடிவெடுத்தார். சிறிய மீனை விட்டு  பெரிய மீனைப் பிடிக்கும் திட்டம் ஒன்றை யூதர்களுடன் அமர்ந்து முடிவெடுத்தார்.

அதனடிப்படையில் இரட்டை கோபுரம் அவர்களின் திட்டத்தில் தகர்க்கப்பட்டது, தகர்ப்புக்கு உஸாமா பெயர் சூட்டப்பட்டது அதன் மூலம் உலக மக்களிடமிருந்து அனுதாபம் பெறப்பட்டு அதன் பிறகு ஆப்கானை சிதைப்பதற்கு திட்டம் தீட்டப்பட்டது.

பாகிஸ்தானை தளமாக பெற்று கர்ணகொடூரமாக ஆப்கானை தாக்கினார்கள். தன் விரலைக் கொண்டு தன் கண்களை குத்திக் கொண்டதைப்போல் இஸ்லாமிய நாட்டை தளமாகப் பெற்று மற்றொரு இஸ்லாமிய நாட்டை தாக்கும் கேவலமான வேலையை செய்தனர்.  

ஈராக்குடைய ரானுவ பலத்தை குறைப்பதற்காகவும், அதன் இயற்கைவளத்தை கொள்ளையடிப்பதற்காகவும் அத்துடன் பக்கத்திலுள்ள இஸ்ரேலுக்கு அச்சுருத்தல் நீங்கி நிம்மதியாக பாலஸ்தீன பூமியை அவர்கள் திருடுவதற்காகவும் ஈராக்கில் பயங்கர ஆயுதம் இருக்கிறதென்ற புருடாவை அவிழ்த்து விட்டு ஈராக்கை சிதைத்தார்கள் .

அதை ஏன் தந்தையும், மகனும் மட்டும் செய்தார்கள் ? கிளின்டனுடைய ஆட்சியில் அவ்வாறான வெறித் தாக்குதல் நடைபெற வில்லை ( அவ்வப்பொழுது அங்கொன்றும், இங்கொன்றுமாக நடந்தது )

தந்தையும், மகனும் தேர்தல்களில் வெற்றி பெறுவதற்கு அமெரிக்க வாழ் யூத பண முதலைகள் பொருளாதார உதவியை ஒரு பிரதிவுபகார அடிப்படையில் தாராளமாக செய்து உதவினார்கள் அதனால் யூதர்களுக்கு செஞ்சோற்றுக் கடன் தீர்க்க லட்சோபலட்ச அப்பாவி முஸ்லீம் உயிர்களை காவு கொண்டார்கள் என்பதுவே நினர்சனமான உண்மையாகும் .

அது என்ன ? பிரதிவுபகாரம் ?
  • அகண்ட இஸ்ரேல் உருவாக்குவதற்கு பாலஸ்த்தீன பூமியை தாராளமாக களவாட உதவ வேண்டும்,
  • அவ்வாறு அகண்ட இஸ்ரேல் உருவாகிய பின் தாங்கள் நிம்மதியாக வாழவும், அண்டை அரபு தேசங்களை மிரட்டி தங்களுக்கு அடிபணிய வைக்கவும் இராக் மாபெரும் அச்சுருத்தலாக திகழ்வதால் இராக்கின் வல்லமையை ஒடுக்க வேண்டும், அதன் பெட்ரோல் வளத்தை அச்சுருத்தலின்றி உறிஞ்சி கொள்ள வேண்டும்
  • சமீபத்தில் மாவீரனாக அவர்களுக்கு காட்சியளித்த (நமக்கல்ல) ஷேக் உஸாமாவை ஒழித்துக் கட்டவேண்டும்.
என்கின்ற கோரிக்கையை பிதிவுபகாரமாக அவர்களிடம் வைக்கப்பட்டு அவர்களது காலடியில் கணக்கிலடங்கா கைக்கூலிகள் கொட்டப்பட்டன என்பதுவே மறைக்கப்பட்ட, மறுக்க முடியாத உண்மைகளாகும்.

ஜார்ஜ புஷ்ஷூம், டபுள்யூ புஷ்ஷூம் தாங்கள் தங்களுடைய பதவி சுகத்துக்காக யூதர்களிடம் சொற்ப கிரயத்துக்கு விலை போனார்கள்.

அதனால் அப்பாவி முஸ்லிம் உயிர்களை கொன்று குவித்தார்கள் அதில் ஆப்கான் மக்கள் ஒரு ரொட்டித் துண்டை பெறமுடியாத ஏழை பரதேசிகளாவர் அவர்கள் மீது ஈவு இறக்கமின்றி குண்டுகளைப் பொழிந்து கூட்டம் கூட்டமாக கொலை செய்தார்கள் .

அமெரிக்கர்களுடைய உயிர் விலைமதிப்பற்றது !!!

எங்களை எதிர்ப்பவர்களுக்கு இது தான் கெதி என்று இறுமாப்பெய்தினார்கள், அவ்வாறு கூறிப் புளங்காகிதம் அடைந்தவர்ளுடைய கண்களுக்கு முன்பாக இறைவனின் கோபச் சீற்றத்தில் அவர்களுடைய விலை மதிப்பற்ற அமெரிக்க உயிர்கள் காற்றிலடித்தும் வெள்ளத்தில் இழுத்தும் சென்ற போது திகைத்துப் போயிருப்பார்கள்.

நமக்கு கணவில் தூதுச் செய்தி அறிவித்து இஸ்லாமிய மக்களை இனச்சுத்திகரிப்பு செய்யச் சொன்னக் கடவுள் என்ன ஆனார் ? எங்கே போனார் ? என்று விழிபிதுங்கி இருப்பார் என்பதை மிகவும் நாசூக்காக சுட்டிக் காட்டியிருந்தோம்.

அவர்கள் அக்கட்டுரையை மிகவும் மேலோட்டமாக நுனிப் புல் மேய்ந்ததால் உண்மையை விளங்கிக் கொள்ள மறுத்து விட்டார்கள்.

இன்று நாம் பேரழிவு ஏற்படுத்தும் சீற்றங்களுக்கு இயற்கையின் சீற்றம் என்றுப் பெயரிட்டாலும், அவைகள் நிச்சயமாக இறைவனின் கோபத்தினின்றும் வெளியாகுவைகளேயாகும் .

இஸ்லாமியப் பிரதேசத்தில் பேரழிவு சீற்றம் ஏற்படாது என்று கூறுவது அறிவுடமையாகாது, மற்ற தேசங்களை விட இஸ்லாமிய தேசத்தில் தான் அது போன்ற சீற்றங்கள் அதிகம் ஏற்பட வாய்ப்பிருக்கிறது காரணம் ஓரிறைவனாகிய ஏகஇறைவனை ஏற்று வழி நடக்க கடமைப்பட்ட இஸ்லாமிய சமுதாயம் அவனுடைய கட்டளைகளை பகிரங்கமாக புறக்கனிக்கும் போது அங்கு தான் இறைவனின் கோபம் இறங்க அதிக வாய்ப்பிருக்கிறது வேலியே பயிரை மேய்கிறதே என்கிற எண்ணத்தில் அல்லாஹ் அந்த மக்கள் மீது இன்னும் கொஞ்சம் கூடுதலாகவே கோபம் கொள்வான் என்பதே யதார்த்தம்.

மறுமையில் முஸ்லிம் சமுதாயத்தவர்கள் 73 பிரிவினராக இறைவனின் முன்பு அணி வகுத்து வருவார்கள் அந்த 73 அணியினரில் 72 அணியினர் நரகம் புகுவார்கள், 1 அணியினர் மட்டும் சுவனம் புகுவார்கள் என்பது நபிமொழி நரகம் புகும் 72 அணியினர் உலகில் முஸ்லீம் பெயர் தாங்கிகளாக வாழ்ந்தார்கள் என்பதால் நரகத்தில் தாலாட்டப்பட்டுக் கொண்டு இருப்பார்களா ?

வேதனை செய்யப் பட்டுக் கொண்டேயிருப்பார்கள் அவ்வாறு அங்கு வேதனைக்குள்ளாக்கப்படுபவர்கள் அவ்வேதனைகளை உலகிலும் கொஞ்சம் சுவைக்கவே செய்வார்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும் .

இறைவனின் கோபம் மனித சமுதாயத்தில் இறங்கும்போது அவைகள் சாதி, மதம் பார்ப்பதில்லை என்பதே தெளிவு ! அதிலும் ஒரு சிறிய வித்தியாசம் உள்ளது தீயோர்களுக்காக இறங்கும் அந்த சீற்றம் அருகிலுள்ள நல்லறங்களை மட்டுமே செய்து வாழ்ந்து கொண்டிருந்;த மக்களையும் பாதிக்கவேச்செய்யும்.

ஆனால் அந்த இரண்டுப் பிரிவினர்களையும் எழுப்பப்படும் நாளில் நல்லறங்கள் செய்து வாழ்ந்தவர்களுக்கு சுவனச் சோலைகளையும், தீமைகளை மட்டும் செய்து தட்டழிந்து கெட்டுத் திரிந்தவர்களுக்கு நரகவேதனையும் வழங்கப்படுவதாக தங்களது அருமைத் துனைவியார் ஆயிஷா (ரலி) அவர்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் விளக்கிக் கூறியுள்ளார்கள்.

மனிதர்களே! உங்கள் இறைவனுக்குப் பயந்து நடந்து கொள்ளுங்கள், அவன் உங்கள் யாவரையும் ஒரே ஆத்மாவிலிருந்து படைத்தான், அவரிலிருந்தே அவர் மனைவியையும் படைத்தான்;. பின்னர் இவ்விருவரிலிருந்து, அநேக ஆண்களையும் பெண்களையும் (வெளிப்படுத்தி உலகில்) பரவச் செய்தான்;. ஆகவே, அல்லாஹ்வுக்கே பயந்து கொள்ளுங்கள்;. அவனைக்கொண்டே நீங்கள் ஒருவருக்கொருவர் (தமக்குரிய உரிமைகளைக்) கேட்டுக் கொள்கிறீர்கள்;. மேலும் (உங்கள்) இரத்தக் கலப்புடைய உறவினர்களையும் (ஆதரியுங்கள்). - நிச்சயமாக அல்லாஹ் உங்கள் மீது கண்காணிப்பவனாகவே இருக்கின்றான். 4:1..

உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு அருளப்பட்டதையே பின்பற்றுங்கள்! அவனை விடுத்து (மற்றவர்களை) பொறுப்பாளர்களாக்கிப் பின்பற்றாதீர்கள்! குறைவாகவே படிப்பினை பெறுகிறீர்கள்!  7:3

எத்தனையோ ஊர்களை அழித்திருக்கிறோம். அவ்வூர்களுக்கு நமது வேதனை இரவு நேரத்திலோ, முற்பகலில் அவர்கள் தூங்கும் போதோ வந்து சேர்ந்தது. 7:4.

உங்களுக்கு முன் அநீதி இழைத்த பல தலைமுறையினரை அழித்திருக்கிறோம். அவர்களிடம் அவர்களின் தூதர்கள் தெளிவான சான்றுகளைக் கொண்டு வந்தனர். அவர்கள் நம்பிக்கை கொள்வோராக இருக்கவில்லை. குற்றம் புரியும் கூட்டத்தை இவ்வாறே தண்டிப்போம்.  10:13.

மேற்கானும் திருமறை வசனங்களில் பாவிகள் வாழ்ந்து வந்த எத்தனையோ ஊர்களை நாம் அழித்திருக்கிறோம். உங்களுக்கு முன்னிருந்த எத்தனையோ தலைமுறையினர்களை, அவர்கள் அநியாயம் செய்த போது அழித்திருக்கின்றோம் என்று அல்லாஹ் ரப்புல் ஆலமீன் கூறுகிறான் இவ்வாறு திருமறையில் பல இடங்களில் சுட்டிக்காட்டுகிறான் அவ்வாறு சுட்டிக்காட்டும்போது மனிதர்கள் என்றும், பாவிகள் என்றும், அநியாயாக்காரர்கள், குற்றம் செய்யும் ம்ககளுக்கு என்றும் மட்டுமேக் குறிப்பிடுகின்றான் அங்கே சாதி, மதம் குறிப்பிடப்பட வில்லை.
 
இதிலிருந்து அநியாயமும், அட்டூழியமும் தலைவிரித்தாடும் சமுதாயத்தில் அல்லாஹ்வுடைய கோபம் இறங்கும் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்.


وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ
3:104. நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.... அன்புடன் அதிரை ஏ.எம்.பாரூக்