திங்கள், நவம்பர் 14, 2011

அமெரிக்க சூறாவளி

فَلَمَّا رَأَوْهُ عَارِضًا مُّسْتَقْبِلَ أَوْدِيَتِهِمْ قَالُوا هَذَا عَارِضٌ مُّمْطِرُنَا بَلْ هُوَ مَا اسْتَعْجَلْتُم بِهِ رِيحٌ فِيهَا عَذَابٌ أَلِيمٌ

46:24. தமது பள்ளத்தாக்குகளை நோக்கி வரும் மேகமாகவே அதை அவர்கள் கருதினார்கள். ''இது நமக்கு மழை பொழியும் மேகமே'' எனவும் கூறினர். ''இல்லை! எதற்கு அவசரப்பட்டீர்களோ அதுவே இது. துன்புறுத்தும் வேதனை நிரம்பிய காற்றாகும்'' (என்று கூறப்பட்டது.)


கட்டுரை எழுதியது  Saturday, August 19, 2006


சமீபத்தில் அமெரிக்காவில் ஏற்பட்ட இருவகையான சீற்றங்கள் மூலம் கனிசமான உயிர் சேதமும், மிதமிஞ்சிய பொருளாதாரச் சரிவும் ஏற்பட்டதாக மீடியாக்கள் கூறின அவர்களுடைய விஷயத்தில் மீடியாக்கள் எப்பொழுதுமே கொஞ்சம் அடக்கித்தான் வாசிக்கும். ஆனாலும் உலக நாடுகள் அளித்த நன்கொடைகளை ( நிவாரண நிதி ) பெற்றுக்கொண்டதன் மூலம் மிதமிஞ்சிய பொருளாதாரச் சரிவு ஓரளவுக்கு உண்மை தான் என்பதை அறிந்து கொண்டோம்.

நபிமார்களும், வேதங்களும் வந்து கொண்டிருந்த காலகட்டங்களில் இது போன்றே பல முறைகள் நடந்துள்ளன. இவைகள் நடப்பதற்கு முன்னதாகவே அந்த சமுதாய மக்களிடம் இது போன்று ஒரு அழிவு உங்களிடம் வரவிருக்கிறது ஆகவே திருந்திக் கொள்ளுங்கள் உங்கள் தவறுகளுக்கு இறைவனிடம் வருந்திக் கொள்ளுங்கள் என்று தனது தூதர்கள் மூலம் அல்லாஹ் எச்சரித்து அதை மக்கள் மீறும் போது இது போன்ற சீற்றங்களை ஏவி அவர்களை அழித்து விட்டு அதில் வேறொரு சமுதாயம் உருவாக்கப்பட்டதையும் அல்லாஹ் தனது திருமறையில் பல இடங்களில் சுட்டிக் காட்டுகிறான், அதுமட்டுமல்ல அவ்வாறு இறைவனின் ஏவலில் சீறிய சீற்றங்களில் சிக்கி சிதறுண்ட நகரங்கள் இடிபாடுகளுடன் இன்றும் காட்சியளித்துக் கொண்டிருப்பதையும் சுட்டிக்காட்டுகிறான்.

அவைகள் பொய்யல்ல மாறாக இன்றும் குறிப்பிட்ட அவ்விடங்கள் அல்லாஹ் கூறிய பிரகாரம் அரேபிய பாலைவெளிகளில் வீற்றிருப்பதை நம்மைக்காட்டிலும் அவர்கள் அறிந்தவர்காளாக உள்ளனர்.

முதலில் அமெரிக்காவில் ஏற்பட்ட இறைவனின் சீற்றத்தில் பலியான உயிர்களுக்காக நாம் நம்முடைய ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறோம்.

உயிர்களின் மீது பரிவு கொள்வது ஒவ்வொரு முஃமினுடைய கடமையாகும். மதம் என்று வரும் பொழுது அதில் மனிதன் மாச்சர்யம் கொண்டாலும், உயிர் என்று வரும் பொழுது அவ்வுயிர் எம்மதத்தைச் சார்ந்ததாக (மனித இனம், மிருக இனம் எதுவாக) இருந்தாலும் அதன் மீது பரிவு கொள்ள வேண்டும்.

ஈரமுள்ள ஈரல் கொண்ட ஒவ்வொரு உயிரிணத்தின் மீதும் கருனை கொள்வது தர்மமாகும் என்று நபி (ஸல்) அவர்கள் நவின்றார்கள் அறிவிப்பவர் : அபூஹூரைரா (ரலி) நூல் : அபூ தாவூத்.

இவ்விஷயத்தில் அன்றும், இன்றும் முஸ்லிம்கள் தனித்தன்மையுடன் சிறந்து விளங்கியதை நாம் பட்டியிலிட்டு எழுத முடியும் அல்லாஹ்வின் தூதருடைய காலத்தில் நடந்த யுத்தங்களாகட்டும், அதன் பின் சஹாபாக்கள் காலத்தில் நடந்த யுத்தங்களாகட்டும். அவர்கள் மற்ற நாடுகளை வெற்றி கொள்ளும்போது அங்குள்ள மனிதர்கள் மீதும், அவர்களின் அசையும். ஆசையாச்சொத்துக்களின் மீதும் எவ்வாறு பரிவுடன் நடந்து கொண்டார்கள் என்பதையும், இதே மற்றவர்களின் யுத்தங்களின் போது சிலுவை யுத்தம் முதல் சமீபத்தில் நடந்த ஆப்கான், ஈராக் யுத்தங்கள் வரை அவர்கள் மனித உயிர்களின் மீது எவ்வாறு நடந்து கொண்டார்கள் என்பதையும் இஸ்லாமிய ஊடகங்களில் பார்த்திருக்கிறோம்.

ஹூது (அலை) அவர்கள் காலத்தில் ஆது சமுதாயத்தவர்கள் மீது அல்லாஹ் ரப்புல் ஆலமீன் ஏவி விட்ட கொடுங்காற்றைப் பற்றி ஒரு தலைப்பில் எழுதினோம். அதை இப்பொழுது நினைவு படுத்தினால் நன்றாக இருக்கும். அதுவும், சமீபத்திய அமெரிக்காவில் வீசிய ( ரீட்டா ) எனும் கொடுங்காற்றையும் ஒப்பிட்டுப் பார்த்தால் ரீட்டாவும் இறைவனின் கோபம் தான் என்பது தெளிவாகும்.

பேரிறைச்சலைக் கொண்ட வேகமான காற்றை அனுப்பினோம், 46:24.

41:15. ஆது சமுதாயம் பூமியில் நியாயமின்றி ஆணவம் கொண்டனர். ''எங்களை விட வலிமை மிக்கவர் யார்?'' எனக் கேட்டனர். அவர்களைப் படைத்த அல்லாஹ் அவர்களை விட வரிமையானவன் என்பதை அவர்கள் காணவில்லையா? அவர்கள் நமது சான்றுகளை மறுப்போராக இருந்தனர்.

மாட மாளிகைகளையும், சொகுசு பங்களாக்களையும் அழகிய கலை நுட்பத்துடன் வடிவமைத்து இன்றைய அமெரிக்கர்கள் போன்று அன்றைய ஆது சமுதாயத்தவர்கள் சொகுசு வாழ்க்கை வாழ்ந்தனர்.
அவர்களுடைய பூமியில் மிகவும் உயரமான இடத்தில் மக்கள் கண்டு வியப்புறும் வகையில் வின்னை முட்டும் நினைவுச் சின்னங்களை அமைத்துக்கொண்டனர். நிரந்தரமாக வாழ்வோம் அல்லது மரணித்தாலும் மரணத்துடன் முடிந்து விட்டது மீண்டும் எழுப்பப் பட மாட்டோம் என்று இன்றைய அமெரிக்கர்கள் போல் அன்றைய ஆது சமுதாயத்தவர்கள் அனுபவித்தார்கள்.

''நீங்கள் ஒவ்வோர் உயரமான இடத்திலும் வீணாக சின்னங்களை நிர்மாணிக்கின்றீர்களா? 26:128. இன்னும், நீங்கள் நிரந்தரமாக இருப்போம் என்று, (அழகிய வேலைப்பாடுகள் மிக்க) மாளிகைகளை அமைத்துக் கொள்கின்றீர்களா? 26:129.

தங்களுக்கு கீழுள்ளவர்கள் சிறிய தவறைச் செய்தாலும் குவான்டனாமோ சிறையில் அடைத்து கடும் சித்ரவதை செய்து மகிழ்ந்ததைப்போல் செய்யாத குற்றத்திற்காக ஆப்கனையும், ஈராக்கையும் அடித்து சல்லடையாக்கி மகிழ்ந்த அமெரிக்க டாம்பீக அரசைப்போல் அன்றைய ஆது சமுதாயததவர்கள் செய்து மகிழ்ந்ததாக அல்லாஹ் குறிப்பிட்டு எச்சரிக்கிறான்.

26:129.நிரந்தரமாக இருப்பதற்காக வரிமையான கட்டடங்களை உருவாக்குகிறீர்களா?
26:130. நீங்கள் பிடிக்கும் போது அடக்குமுறை செய்வோராகப் பிடிக்கிறீர்கள்.
16:131. எனவே அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்! எனக்குக் கட்டுப்படுங்கள்!

ஆனாலும் அவர்கள் அல்லாஹ்வின் கூற்றுக்களை தொடர்ந்து மறுத்தார்கள் அதனால் அல்லாஹ் அவர்கள் மீது கடும் கோபம் கொண்டு சாபமிடலானான்

11:60. இவ்வுலகிலும், கியாமத் நாளிலும்1 அவர்களைச் சாபம் விரட்டியது. கவனத்தில் கொள்க! ஆது சமுதாயத்தினர் தமது இறைவனை மறுத்தனர். கவனத்தில் கொள்க! ஹூதுவின் சமுதாயமான ஆது சமுதாயம் (இறையருளை விட்டும்) தூரமாயினர்.

வெகுவிரைவில் அல்லாஹ்விடமிருந்து தங்களுக்கு வரவிருக்கும் பேரழிவை நம்ப மறுத்து அல்லாஹ்விடமிருந்து வர இருக்கும் பேரழிவை வரவழைத்துக் காட்டும் படி நபியவர்களிடம் திமிர் வாதம் பேசினர்.. . .

7:70...நீர் உண்மையாளராக இருந்தால் எங்களுக்கு நீர் எச்சரிப்பதை எங்களிடம் கொண்டு வாரும்'' என்று அவர்கள் கூறினர்.

ஒரு நாள் மேகம் வானத்தின் வெளிச்ச மண்டலத்தை மூடுகிறது பூமியில் எங்கும் இருள் படலமாகிறது அதைப்பார்த்தும் ஆது கூட்டத்தார் அல்லாஹ் தனது நபியின் மூலம் விடுத்த எச்சரிக்கைகள் நினைவுக்கு வர வில்லை. அதை அல்லாஹ்வின் வேதனை வரப்போகிறது என்று உணர வில்லை மாறாக

ஆது சமுதாயத்தினரும் பொய்யெனக் கருதினர். எனது வேதனையும், எனது எச்சரிக்கைகளும் எவ்வாறு இருந்தன? ,தொடர்ந்து துர்பாக்கியமாக இருந்த ஒரு நாளில்381 அவர்களுக்கு எதிராகக் கடும் சப்தத்துடன் காற்றை நாம் அனுப்பினோம். வேருடன் பிடுங்கி எறியப்பட்ட பேரீச்சை மரங்களைப் போல் மனிதர்களை அது பிடுங்கி எறிந்தது. எனது வேதனையும், எச்சரிக்கைகளும் எவ்வாறு இருந்தன? 54:18 லிருந்து 21 வரை.

படிப்பினைகள் : வின்னை முட்டும் கோபுரங்களும், மாட மாளிகைகளும் நினைவுச் சின்னங்களையும். பூமியில் நிர்மானித்தவர்களாகிய தனக்கு கீழுள்ளவர்களை சிறிய குற்றங்களுக்காக சிதரவதை செய்து மகிழ்ந்த மாபெரும் உடல் வலிமைப் பெற்றவர்களாகிய, தன்னைப் போன்ற வலிமை வாய்ந்தவர்கள் பூமியில் உண்டோ ? என மார் தட்டிய பேர் வழிகள் நிலையான துர்பாக்கியமுடைய ஒரு நாளில், பேரிறைச்சலைக் கொண்ட வேகமான காற்றில் ( புயலில்) சிக்கி சிதைந்து, மண்ணோடு மண்ணாக மறைந்து போனர் . சுப்ஹானல்லாஹ்.

ஆப்கான் அடித்து நொருக்கப்பட்டு மனித உயிர்களைக் கொன்று குவியல், குவியல்களாக குவிக்கப்பட்டு, அதன் வடு ஆருவதற்கு முன் ஈராக்கும் அதே வழியில் சிதைக்கப்பட்டு சதாம் கைது செய்யப்பட்டப்பின் டபிள்யூ புஷ் கீழ்கானுமாறு கூறினார் எங்களை எதிர்ப்பவர்களுக்கு இது தான் கெதி என்று இருமாப்பாய் கர்ஜித்தார்;. மேல்படி அறிக்கையைப் படித்ததும் லிபியாவின் அதிபர் தாமதமின்றி அவரிடம் சரணடைந்ததும் நினைவிருக்கும்.

அன்று ஆது சமுதாயத்தவர்கள் கூறியதற்கும். இன்று இவர்கள் கூறுவதற்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது ? அதனால் அவர்களின் மீது ஏவியது போன்ற கொடுங்காற்றை இவர்கள் மீதும் ஏவினான் (இரண்டிற்குமிடையில் உள்ள ஒரு வித்தியாசம் அன்று முழுமையாக அழித்தொழித்தான் இன்று படிப்பினைக்காக விட்டு வைத்துள்ளான் )

அநியாயக்காரன் மீண்டும் வெற்றிப் பெற்று விட்டானே ? என்று அன்று நாம் கவலை அடைந்தோம் ஆனால் இன்று அல்லாஹ்வின் ஏற்பாடு வேறு மாதிரியாக இருந்ததை நாம் அறிய  வில்லை.

இனவெறிப்பிடித்த ஜார்ஜ் புஷ்ஷூம், அவரது மகன் டபிள்யூ புஷ்ஷூம் இஸ்லாத்தை தவறான மதம் என்று பிரகடனப் படுத்தியும், முஸ்லிம்களை தீவிரவாதிகள் என்று முத்திரைக் குத்தியும் உலக அப்பாவி மக்களை நம்ப வைத்து தங்களது வலிமை வாய்ந்த ரானுவத்தைக் கொண்டு அப்பாவி முஸ்லிம் உயிர்களை வேட்டையாடி கொன்றுக் குவித்தனர். முஸ்லிம் மக்கள் செத்து மடிந்ததைக் கண்டு பூரிப்படைந்த புஷ்ஷூம், டபிள்யூ புஷ்ஷூம் கொடுங்கோலர்களாகிய தங்களை மீண்டும் ஆதரித்து வாக்களித்த தங்களது இனத்து மக்கள் இறைவனின் சீற்றத்தில் மூழ்கி மடிந்ததைக் கண்டு பூரிப்படைந்திருப்பார்களா ? மாறாக துடி துடித்திருப்பார்கள்.

வல்ல அல்லாஹ் அவரை மீண்டும் அரச பதவியில் அமர்த்தி தான் யார் ? என்பதை தன்னுடைய அதிகாரம் என்னவென்பதை அவர்களுக்கு உணர்த்தி அவர்களுடைய டாம்பீக பேரரசை இலோசான ஒரு உலுக்கு உலுக்கி உலக நாடுகளிடம் அவர்களை பிச்சை எடுக்க வைத்தான்? அதிலும் முக்கிமாக கவனிக்க வேண்டிய விஷயம் அன்றாடம் காய்ச்சி (ஏழை) நாடுகளிடமும் கை நீட்ட வைத்தான்.

அவர் அந்த தேர்தலில் தோல்வியுற்றிருந்தால் நிச்சயம் நாம் சந்தோஷப்பட்டிருப்போம் மாற்றமில்லை, ஆனால் அதை விட சந்தோஷம் இப்பொழுது அவர் உலக நாடுகளில் பிச்சை எடுத்ததும். அவர் பதவியிலிலிருக்கும் போதே தனது நாட்டின் பொருளாதாரம் அதள பாதாளத்தில் சென்று கொண்டிருப்பதைப் பார்க்க வைத்து உள்ளம் குமுறுவதை அவருக்கு அல்லாஹ் துனியாவில் தண்டனையாக்கியதுடன், மறுமையில் மாபெரும் தண்டனையை சித்தப் படுத்தி வைத்திருப்பான்.

எந்த ஒரு அரசனும் பூமியில் தனது நாடு வல்லரசு என்று மார்தட்டிக் கொள்ள முடியாது அல்லாஹ்வின் அர்ஷே நிலையான வல்லரசாகும் என்பதை அமெரிக்காவின் சமீபத்திய பொருளாதாரச் சரிவு நிருபிக்கிறது. பொருளாதாரம் சரிந்து விட்டால் வல்லரசு எனும் டாம்பீகம் மண்ணைக் கவ்வும் என்பதில் எவருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.

மேலும் குறிப்பிட்ட ஒரு சமுதாயத்தின் மீது அல்லாஹ் தனது வேதனையை இறக்க நினைத்தால் முதலில் அந்நாட்டின் செல்வத்தைத் துடைத்தெடுத்து வறுமையையும் ? பஞ்சத்தையும் புகுத்துவான் அது அவனுடைய முன்னெச்சரிக்கையாகும் அதிலும் அவர்கள் திருந்த வில்லையென்றால் அவர்களையே துடைத்தெறியக் கூடிய மாபெரும் சீற்றத்தை ஏவுவான்.

7:130. ''படிப்பினை பெறுவதற்காகப் பல வகைப் பஞ்சங்களாலும் பலன்களைக் குறைப்பதன் மூலமும் ஃபிர்அவ்னுடைய சமுதாயத்தைத் தண்டித்தோம்''

7:136. அவர்கள் நமது சான்றுகளைப் பொய்யெனக் கருதி, அவற்றை அலட்சியம் செய்து வந்ததால் அவர்களைத் தண்டித்தோம். அவர்களைக் கடரில் மூழ்கடித்தோம்.

இப்பொழுது அமெரிக்காவில் இலோசான சீற்றத்தினால் ஏற்பட்டப் பஞ்சத்தின் மூலம் அவர்கள் படிப்பினைப் பெறவில்லை என்றால் குர்ஆனில் அல்லாஹ் சுட்டிக் காட்டுகின்ற ஆது சமுதாயத்தவர்களுடைய வரலாறைப் படித்து படிப்பினைப் பெறட்டும்.


وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ
3:104. நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.... 
அழைப்புப் பணியில் அன்புடன் அதிரை ஏ.எம். பாரூக்